ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள்
இரண்டு சிறுமிகள் உட்பட 11 பேர் சுட்டு கொலை!
மெக்ஸிகோவில்
ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து
அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
பியூப்லா
மாகாணத்தின் காக்ஸ்கேட்லன் நகராட்சிக்குட்பட்ட
புறநகர்ப் பகுதியில்
கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம்
நடைபெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த
சம்பவத்தில் ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள்
மற்றும் இரண்டு
சிறுமிகள் உயிரிழந்தனர்.
காயமடைந்த மேலும்
இரண்டு குழந்தைகள்
டெகுவாகேன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
இந்த
சம்பவத்தை நேரில்
கண்ட ஐந்து
பேர் வாக்குமூலம்
அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், இருவர் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். அவர்கள் அண்டை
மாகாணமான ஓக்ஸகாவுக்கு
தப்பியோடிவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம்
நடைபெற்றுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.