ஆப்கானிஸ்தான்
காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானின்
தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது
14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேபாளத்தைச்
சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற மஞ்சள்நிற மினி பஸ் மீதே, இந்தத்
தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது.
இறந்தோரின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை
8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பில்
சேதமடைந்த மினி
பஸ்ஸில் இருந்து பல உடல்கள்
உருக்குலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டதாக சம்பவத்தை
நேரில் பார்த்தவர்கள்
தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் புனித
மாதமாக கருதப்படும்
ரமழான் நோன்பின்போது
நடந்துள்ள இந்த
தாக்குதல் அங்குள்ள
தீவிரவாதிகளின் மூர்க்கத்தனத்துக்கு முன்னுதாரணமாக
அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.