தாய்லாந்து
வீதி விபத்து:
11 தனியார் பாடசாலை ஆசிரியர்கள் தீயில் கருகி
உயிரிழப்பு
தாய்லாந்தில்
தனியார் தொடக்கப்
பாடசாலைக்கு சொந்தமான வேன் விபத்துக்குள்ளானதில்
பாடசாலை ஆசிரியர்கள்
11 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
இதுகுறித்து
அந்த நாட்டு
உள்துறை அமைச்சின்
பேரிடர் தடுப்புத்
துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளதாவது:
சவோன்புரிஸ்
மியாங் மாவட்ட
நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.
தனியார் தொடக்கப்
பாடசாலைக்கு சொந்தமான வேன் வேகமாகச் சென்று
கொண்டிருந்த போது அதன் டயர் எதிர்பாராதவிதமாக
திடீரென வெடித்தது.
இதனால் சாரதியி,ன் கட்டுப்பாட்டை இழந்த அந்த
வாகனம் தலைகுப்புற
கவிழ்ந்து தீப்பிடித்தது.
இச்சம்பவத்தில்,
வேனில் பயணம்
செய்த பாடசாலை
ஆசிரியர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
வேன் சாரதி
உட்பட 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று
வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.