சீனாவில் பஸ் வெடித்த விபத்தில் 30 பேர் உடல் கருகி பலி
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ், திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது மோதியது. மோதிய வேகத்தில் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21
பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.