இரண்டு பெண்களை காதலித்து
ஒரே மேடையில் திருமணம் முடித்த இளைஞன்
இந்தோனிஷியாவில் சம்பவம்
தன்னைக் காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில்
இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது ஒரு குக்கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனிஷியாவைச் சேர்ந்த இந்த இளைஞரின் துணிச்சலான முடிவு இணையத்தில்
வைரலாகி வருகின்றது.
இது குறித்து மணமகன் கூறியிருப்பதாவது,
இரண்டு பெண்களும் என்னை காதலித்தனர், ஆதலால், நான் இருவரையும்
திருமணம் செய்து கொண்டேன். நான் அவர்களின் வரதட்சணைக்கோ அல்லது வேறு எதற்காகவோ ஆசைப்பட்டு
இவ்வாறு திருமணம் செய்யவில்லை.
நான் இவர்களில் ஒருவரை மட்டும் திருமணம் செய்தால் மற்றவர் மனம்
நொந்துவிடுவார். என்னால் யார் மனமும் உடைந்து போவதை நான் விரும்பவில்லை. இதனால் ஒரே
நேரத்தில் இருவரையும் திருமணம் செய்து விட்டேன். இருவரும் சம்மதம் தெரிவித்த பின்னர்தான்
இந்த முடிவை எடுத்தேன். என மணமகன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.