பிரான்ஸில்
பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது
148 பேர் பலி?
பிரான்ஸில்
148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும்
இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜெர்மன்விங்ஸ்
விமான நிறுவனத்தின்
ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று
ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின்
பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில்,
142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம்
செய்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்த
விமானம் பிரான்ஸ்
நாட்டின் தெற்குப்
பகுதியில் உள்ள
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு
மேலே பறந்தபோது
திடீரென விமானியின்
கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதனை காவல்துறையும்,
விமான போக்குவரத்து
துறையும் உறுதி
செய்துள்ளது.
ஆனால்,
விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி
தெரியவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்துள்ளனர்.
இந்த
விபத்தில் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என
பிரான்ஸ் பிரதமர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.