உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி
அரையிறுதிக்கு
முன்னேறியது நியூசிலாந்து அணி
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான இன்றைய
காலிறுதி ஆட்டத்தில்
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி நியூசிலாந்து
அணி அரையிறுதிக்கு
முன்னேறியுள்ளது.
மேற்கிந்திய
தீவுகள் அணியை 143 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப்
பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு
முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி , தென்னாப்ரிக்கா
அணியைச் சந்திக்கிறது.
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 4-வது
காலிறுதி போட்டி நியூசிலாந்தில்
உள்ள வெலிங்டனில்
இன்று நடந்தது.
394 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
மிகக் கடினமான
இலக்கை நோக்கி
களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 30.3 ஓவர்களில்
250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்து படுதோல்வி
அடைந்தது.
முன்னதாக
நாணயற் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி
பேட்டிங் செய்து,
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 393 ஓட்டங்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக
குப்தில் 163 பந்துகளில் 237 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம்
உலகக் கிண்ணப்
போட்டியில் இரட்டை சதம்
அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை
குப்தில் பெற்றார்.
டெய்லர் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.