இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30
மணிக்கு இலங்கை வந்தடைந்தார். இவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமான நிலையம் சென்று
வரவேற்றார். இந்திய பிரதமர் விமான நிலையத்திலிருந்து தரை வழியாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் அழைத்து வரப்பட்ட பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் எவரும் பாதைகளில் நடமாடவும் பாதுகாப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை. இந்தியப் பிரதமரின் விஜயத்தையொட்டி கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியப் பிரதமர் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு
அழைத்து வரும் வரைக்கும் பாதைகள் மூடப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருப்பதக்
காணலாம்
|
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.