அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சொந்தப் பணத்தில்
சாய்ந்தமருது ஜும்ஆ
பள்ளிக்கு நவீன ஒலிபெருக்கித் தொகுதி!
சாய்ந்தமருது
ஜும்ஆப் பெரிய
பள்ளிவாசலுக்கு அவசிய்டத் தேவையான நவீன ஒலிபெருக்கித்
தொகுதி கொள்வனவுக்காக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது சொந்த
நிதியில் இருந்து
9 லட்சம் ரூபாவை
ரொக்கப் பணமாக வழங்கியுள்ளார்.
இத்
தொகைப் பணத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று
20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்
தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ்
வை.எம்.ஹனிபா தலைமையில் பள்ளிவாசல் காரியாலய
மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில்
அமைச்சரின் சார்பில் அவரது இணைப்புச் செயலாளர்
ரஹ்மத் மன்சூர்
கலந்து கொண்டு
மரைக்காயர்
சபையினர் முன்னிலையில் பள்ளிவாசல் தலைவரிடம்
இந் நிதியினை
ரொக்கப் பணமாகக் கையளித்தார்.
இவ்வைபவத்தில்
கல்முனை மாநகர பிரதி முதல்வர்
ஏ.எல்.அப்துல் மஜீத்
உள்ளிட்ட பிரமுகர்களும்
மற்றும் பள்ளிவாசல் மரைக்காயர்களும்
கலந்து கொண்டனர்.
அமைச்சரின்
இந்நிதி உதவிக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர்
வை.எம்.ஹனிபா நீண்டநாள் தேவை
ஒன்றை நிறைவேற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி கூறியதுடன், சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை ஒன்றை பெற ரவூப் ஹக்கீம் அவர்கள் உதவவேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.