இந்தியாவில்
ரயில் தடம் புரண்டு விபத்து
30பேர் பலி; 150 பேர் படுகாயம்
இந்தியாவிலுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்னலை கவனிக்காமல்
சென்ற ரயில்
ஓட்டுநரால், பயணிகள் ரயிலின் எஞ்ஜின் மற்றும்
இரண்டு பெட்டிகள்
தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.