முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ஹக்கீம்
இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
தலைமையிலான கட்சியின் உயர் மட்டக்குழுவினரை இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடி நேற்று
சந்தித்து கலந்துரையாடினர். நேற்று
இரவு கொழும்பு
தாஜ் சமுத்திரா
ஹோட்டலில் சந்தித்து
அதிகாரப் பகிர்வு,
வடக்கு முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் உட்பட முக்கிய
விடயங்கள் குறித்து
கலந்துரையாடினர். கிழக்கு
மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி
நெசவுத் தொழிலை
ஊக்குவித்தல், தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பீடங்களை நிறுவதற்கும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும்
உதவி வழங்குமாறு
கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில்
முஸ்லிம் காங்கிரஸின்
முயற்சியினால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியப் பிரமதர் மோடி
தம்மைச் சந்தித்த
குழுவினரிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.