தெஹிவளையில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் மரணம்!
வீட்டின் உட்புறங்கள்
கருகிய நிலையிலுள்ள காட்சிகள்
தெஹிவளை,
கவுடான வீதியில்
உள்ள வீடொன்றில்
இருந்து நேற்று காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின்
மையத்துக்கள் வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன்
காரணமாகவே குறித்த
நான்கு பேரும்
உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா
வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத
பரிசோதனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த
சடலங்கள் நேற்று
காலை 10 மணியாளவில்
தெஹிவளை பொலிஸாருக்கு
கிடைத்த தகவலின்
படி மீட்கப்பட்டன.
இவ்வாறு
உயிரிழந்தவர்கள் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய
தந்தை, 52 வயதுடைய
தாய், 13 வயதுடைய
மகள் மற்றும்
13 வயதுடைய உறவுக்கார சிறுமி ஒருவரும் என கண்டறியப்பட்டிருந்தது.
குறித்த
65 வயதுடைய நபர் பிரபல வர்த்தகர் என்பதுடன்,
இவர்கள் நீண்டகாலமாக
கொழும்பில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.