ரஜினியின் 'கட்-அவுட்'க்கு செய்யப்படும் பாலாபிஷேகத்தால்
ஏராளமான பால் வீனாகுவதாகக் கூறி
நீதிமன்றத்தில் வழக்கு
ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் போது, அவரது 'கட்-அவுட்'க்கு செய்யப்படும் பாலாபிஷேகத்தால் ஏராளமான பால் வீனாகுவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரூவைச் சேர்ந்த ஐ.எம்.எஸ்.மணிவண்ணா என்பவர் தொடர்ந்த வழக்கில், நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது, அவரது ரசிகர்கள் ஏராளமான பாலை, அவரது படத்தின் மீது கொட்டி பாலாபிஷேகம் செய்கின்றனர். இதனால் ஏராளமான பால் வீணாகிறது. இதைத் தடுப்பதற்கு நடிகர் ரஜினி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.