கூட்டு எதிர்க்கட்சியின் ஜனசட்டனவில் இணைந்து
கொண்ட
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. கூட்டு எதிர்க்கட்சியின்
ஜனசட்டனவில் தற்போது இணைந்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது
இன்றைய
தினம் நிகழ்வில்
இணைந்து கொள்பவர்களே
உண்மையான சு.க விசுவாசிகள்
என தெரிவித்திருந்த
அவர் கட்சி
விதிகளையும் மீறி நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ஆதரவு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள 'ஜன
சட்டன' பொதுக்கூட்டம்
ஹைட் பார்க்கில்
ஆரம்பமானது. சுகயீனம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதியாகி
உள்ளதாக செய்திகள்
வெளியான நிலையில்
அவர் சற்றுமுன்னர்
'ஜன சட்டன'
பொதுக்கூட்ட மேடையில் ஏறி ஆதரவாளர்களுக்கு கையசைத்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் தமது பொதுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாபெரும் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.