இலங்கையில் தொடரும் அனர்த்தம்!

மற்றுமொரு மின்மாற்றி வெடித்து தீப்பிடிப்பு!

மின்தடைக்கான சாத்தியம் உள்ளதாக

இலங்கை மின்சார  சபை அறிவிப்பு


கொட்டுகொடயிலுள்ள உப மின் விநியோக நிலையம் செயலிழந்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடைக்கான சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார  சபை அறிவித்துள்ளது.
ஜா- எல, கொட்டுகொடயிலுள்ள இலங்கை மின்சார சபைக்குசொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் இன்று பிற்பகல் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தகவலை  மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பியகம உப மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி வெடித்து சிதறியமையால், நாடு முழுவதும் ஒன்பது மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டன.
அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் சுழற்சி முறையிலான ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top