சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தௌஹீத்
ஜூம்ஆப் பள்ளிவாசலில்
இரத்த தான முகாம்
Ibnu
Khaleelur Rahman
நேற்று
(27.03.2016) காலை 09:00 தொடக்கம்- மாலை 04:00 மணி வரை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தௌஹீத் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இரத்தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருந்திரளான மக்கள் குருதி வழங்க இம் முகாமுக்கு சமூகமளித்த போதும் 102 பேருக்கே குருதி வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலர் நேர முடிவின் போது திரும்பிச் சென்றதையும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.
மேற்படி பள்ளிவாசல் நிருவாகம் வருடா வருடம் இவ்வாறான குருதிக் கொடை முகாம்களை ஏற்பாடு செய்து சுகாதாரத் துறைக்கு சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்விலிருந்து சில காட்சிகள் வருமாறு...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.