பெல்ஜியம்
தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில்
இரட்டை குண்டு வெடிப்பு
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று
பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த பலர் காயம்
அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில்
அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும்,
இதில், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி
அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்ததாக செய்தி
வெளியாகியுள்ளது. ஆனால், பலி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.