கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதி
கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட விழா இன்று 23 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வித்தியாலயத்துக்கு சென்ற ஜனாதிபதியை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக> கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, கல்லூரியின் அதிபர் சந்தமாலி அவிருப்பொல, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவியர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.