ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 2017
ஹமீத் அல்ஹூசைனி கல்லூரி வெற்றி
இருபது பாடசாலைகள் பங்குபற்றிய பாடசாலைகளுக்கிடையிலான ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 2017 பரிசளிப்பு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று 22 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற கொழும்பு 12 ஹமீத் அல்ஹூசைனி கல்லூரிக்கான வெற்றிக் கிண்ணத்தை ஜனாதிபதி அவர்கள் கல்லூரியின் கால்பந்தாட்ட அணித் தலைவர் மொஹமட் அமானிடம் வழங்கிவைத்தார்.
வெற்றிபெற்ற அணியின் அனைத்து வீரர்களுக்கும் ஜனாதிபதி அவர்களினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தாஹ் காசிம் அல்முல்லா, கல்லூரியின் அதிபர் எம் எஸ் எம் பைஸல், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.