சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுப்பதற்காக
நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம்
நெல் கையிருப்பை விற்பனை செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
நெல்
சந்தைப்படுத்தல் சபை வசம் இருந்த நெல்
கையிருப்பில் 90,958 மெட்ரிக் தொன்
நெல், அரிசியாக்கப்பட்டு
சந்தைப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில்
ஆலை உரிமையாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம்
தொடர்பான அமைச்சின்
மூலம் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
லங்கா
ச.தொ.ச நிறுவனத்திற்கு
வழங்கப்பட்ட நெல் தொகையானது அரிசியாக்கப்பட்டு ச.தொ.ச வினூடாக
ஒரு கி.கி 76 ரூபா
வீதம் பொதுமக்களுக்கு
விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள
போதும், தனியார்
நெல் ஆலை
உரிமையாளர்களின் மூலம் குறித்த நெல் அரிசியாக்கப்பட்டு
சந்தைக்கு விற்பனை
செய்யப்படவில்லை எனவும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நெல்
சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம் நெல்
கையிருப்பை லங்கா ச.தொ.ச நிறுவனம், தனியார்
நெல் ஆலை
உரிமையாளர்களின் ஊடாக அரிசியாக்கப்பட்டு முறையான செயற்றிட்டமொன்றை
பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும், தற்போது நெல்
வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும்
நெல் ஆலை
உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக
விசேட செயற்பாட்டு
அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை
அமைப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி
அவர்களின் வேண்டுகோளின்
படி 10,000 மெட்ரிக் தொன் அரிசியானது இந்தோனேசியா அரசாங்கத்தின்
மூலம் இலங்கைக்கு
நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வரிசி
தொகையானது அடுத்த
ஒரு சில
நாட்களில் இலங்கையை
அண்மிக்க உள்ளதாக
அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும்
சந்தையில் அரிசி
விலை உயர்ந்து
காணப்படின் இந்தோனேசியா, வியட்நாம்
உட்பட மிகவும்
அருகிலுள்ள நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி
செய்யப்பட்டு துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும்
அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.