டிரம்ப் தனது மருமகனை ஆலோசகராக நியமித்தது சரியே
அமெரிக்க சட்டத்துறை அறிவித்தது
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற 'டொனால்டு டிரம்ப் தனது மருமகனை
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித்தது சரியே’ என அமெரிக்க சட்டத்துறை
அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ஜாரெட் குஷ்னர் நியமிக்கப்பட்டார். அவர் டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர். அதாவது டிரம்பின் மருமகன் ஆவார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசு பதவிகளில் உறவினர்களை நியமிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது. எனவே, பதவி ஏற்றவுடன் இது குறித்து புதிதான நியமிக்கப்பட்ட சட்ட துறையிடம் ஜனாதிபதி டிரம்ப் கருத்து கேட்டார்.
இது குறித்து அரசு துணை அட்டர்னி ஜெனரல் டேனியல் கோப்ஸ்சி 14 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 1967-ம் ஆண்டு சட்டப்படி அரசு பதவிகளில் உறவினர்கள் நியமிக்கப்படலாம் என உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஜான் கென்னடி தனது சகோதரர் ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரல் ஆக நியமித்துள்ளார். 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதி டிரம்ப் தனது மருமகன் ஜாரெட் குஷ்னரை (35) வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித்தது சரியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.