விமல் வீரவங்சவுக்கு பெப்ரவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியல்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விமல் இந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்தற்காக வருகை தந்த நிலையில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.