“கட்சிக்குள் இருப்பவர்களையும் கட்சியையும் விமர்சிக்கும்
எவராக இருந்தாலும், ‘திராணியிருந்தால் நேரில் பேசட்டும்’
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சவால்
“கட்சிக்குள் இருப்பவர்களையும் கட்சியையும் வெளியில் விமர்சிக்கும் எவராக இருந்தாலும், கட்சிப் பொதுக் கூட்டத்தில் நேரடியாகக் கேட்கும் சக்தியிருந்தால் கேட்கட்டும். அதற்குப் பதில்கூற நாம் தயாராகவிருக்கிறோம்’
இவ்வாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களையும் வசைபாடும் படலம் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடங்களிலிலும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சித்துத் திரிபவர்கள், கட்சி உயர்பீடத்தில் நேரடியாகக் கேள்விகளைக் கேட்கமுடியும். அப்படி அவர்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பதில்கூற கட்சியின் உயர்பீடம் தயாராகவிருக்கிறது.
அதைவிடுத்து, வெளியில் வீரங்காட்டித் திரிபவர்களெல்லாம் கட்சியின் விசுவாசிகள் எனக் கூறமுடியாது” எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.