ஜமாஅத் சென்ற மூன்று மாணவர்கள்

 கடலில் மூழ்கி வபாத்

திருகோணமலை-மூதூர், ஹபீப் நகர் கடலில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் இன்று 23 ஆம் திகதி திங்கள் கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் நௌஷாட் (19 வயது), 569/76 பண்டாரநாயக்க பிரதேசம், திஹாரியைச் சேர்ந்த காதர் ஹசன் (17 வயது) மற்றும் 128சி, கண்டி வீதி, திஹாரியைச் சேர்ந்த முஹம்மத் பாயிஸ் முஹம்மத் இக்ராம் ( 20வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது..
மூதூர் பிரதேசத்திற்கு ஜமாஅத் சென்ற இவர்கள் கடலில் குளிப்பதற்காக சென்ற போதே நீரில் மூழ்கியதாக பொலிஸ் ஆரம்ப விசாரணையின் போது தெரியவருகின்றது.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வபாத்தான மாணவர்களின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, துன்கிந்தை நீர் வீழ்ச்சிக்கு அருகில் உள்ள மகாவலி கங்கை பகுதியில்நீராடச் சென்ற மூன்று இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top