கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட
அரச குடும்பத்தினர் உட்பட 7 பேர்இன்று தூக்கிலிடப்பட்டனர்
குவைத் நாட்டில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரச
குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மூன்று பெண்கள் உட்பட 7 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இருவர் குவைத் நாட்டை சேர்ந்தவர்கள். இருவர் எகிப்து நாட்டினர். மேலும் மூன்றுபேர் வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என குவைத் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இவர்கள் 7 பேரும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. குவைத் நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இன்றுதான் முதன் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.