ஆட்பதிவுத் திணைக்களம் இடம் மாறுகிறது!

27 ஆம் திகதியிலிருந்து பத்தரமுல்லையில் என அறிவிப்பு


கொழும்பு ஜாவத்தையில் இயங்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை தொடக்கம் த்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்திற்ல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்திற்காக எதிர்வரும் 23 மற்றும் 26ம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடம்பெறாது என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்பட இருப்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி அந்த திணைக்களம் சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் 27ம் திகதி முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top