ஓய்வு பெற்ற உதுமாலெவ்வைக்கு
பிரியாவிடை
சாய்ந்தமருது
பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை தனது
39 வருட சேவையைப் பூர்த்தி செய்து இன்று ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.
உதுமாலெவ்வையின் சேவையைப் பாராட்டும் நோக்கமாக இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டு. உதுமாலெவ்வை பாராட்டப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு
நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம் இவ்வைபவத்திற்கு தலைமை வகித்ததுடன் உதுமாலெவ்வையின் சேவையைப்
பாராட்டியும்
பேசினார்
பிரதேச செயலாளர் சலீம் உதுமாலெவ்வைக்கு
பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இப் பிரியாவிடை வைபவத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்களர்,
உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்து ஓய்வு பெற்றுச் செல்லும். உதுமாலெவ்வையை வாழ்த்தினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.