சிறுமியை துன்புறுத்திய அவரது சிறியதாய்
பொலிஸாரினால் கைது
யாழ்ப்பாணம்
– கோப்பாய் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கடுமையாக
தாக்கி துன்புறுத்திய
அவரது சிறிய
தாய் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
சிறிய தாயினால்
அந்த சிறுமி
தாக்கப்படுகின்ற சம்பவத்தை அருகிலுள்ள இளைஞர் ஒருவர்
காணொளியில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில்
பதிவேற்றியிருந்தார்.
இந்தக்
காணொளி போப்பாய்
பொலிஸ் நிலையம்
வரை சென்ற
நிலையில் அதற்கமைய
சிறுமியின் சிறிய தாயை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்
யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.