ராம்குமார்
மரணம் தொடர்பில் பரபரப்பை
கிளப்பும்
தற்கொலை செய்து
கொண்ட இடத்தின் புகைப்படங்கள்!
ராம்குமார்
மரணத்தில் மர்மம்
நிலவி வரும்
நிலையில் அவர்
புழல் சிறையில்
தற்கொலை செய்து
கொண்ட இடத்தின்
புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாதி
படுகொலை வழக்கில்
கைது செய்யப்பட்டு
புழல் மத்திய
சிறையில் அடைக்கப்பட்டிருந்த
ராம்குமார், சிறையில் மின் கம்பியை கடித்து
தற்கொலை செய்து
கொண்டதாக சிறை
துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
தற்போது,
வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருக்கும் இடத்தில் தான்
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக மூத்த
சிறைதுறை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
சிறையில்
கைதிகள் அணுக
முடியாத உயரத்தில்
தான் சுவிட்ச்
பலகைகள் இருக்கும்
என ராம்குமார்
தற்கொலையில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில்,
வெளியாகியுள்ள புகைப்படத்தில் பார்க்கும் போது அனைவரும்
அணுகும் வகையில்
தான் சுவிட்ச்
பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது
என தெளிவாக
தெரிகிறது.
மாஜிஸ்ட்ரேட்
சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில்
ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் உண்மை வெளிவரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.