காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் தாக்குதல்
35 தீவிரவாதிகள் பலி?
காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 முதல் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் தரைவழியாகவும், ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் சென்று தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. நள்ளிரவு 12 மணிக்கு சென்ற வீரர்கள் தாக்குதலை முடித்து அதிகாலை 4.30 மணிக்கு இந்திய பகுதிக்குள் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலை தொடர்ந்து முப்படைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் சம்பந்தப்பட்ட முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
![]() |
பாகிஸ்தானில் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் டில்லியில் நடத்தப்பட்ட போது..... |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.