முதலமைச்சர்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி
அவர் நலமாக
உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில்
திடீரென உடல்நலக்குறைவு
ஏற்பட்டதை தொடர்ந்து
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில்
அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல்
மற்றும் நீர்ப்போக்கு
காரணமாக முதல்-அமைச்சர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில்
முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து
கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நிலை
சீராக இருப்பதாக
அப்பல்லோ மருத்துவமனை
மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முதல்வரின்
உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து அதிமுக அமைச்சர்கள்,
தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.