70 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்!
கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக தெரிவிப்பு!!
நாட்டில் பல தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
70 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதிபருக்கான பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற 40 பேரை தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சில பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்ந்தும் அந்த பாடசாலைகளிலேயே கடமையாற்றுவதற்கு முயற்சித்து வருவதால், அதிபர் நியமனம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.