கிழக்கு மாகாண
முதலமைச்சரின் வாகனம்
யானையுடன்
மோதிவிபத்து
திருகோணமலை
- புத்தளம் பிரதான வீதியின் மயிலகுடாவ பகுதியில்
வைத்து, கிழக்கு
மாகாண முதலமைச்சரின்
பாதுகாப்புப் பிரிவினர் சென்ற கெப் வாகனம்,
இன்று21ஆம் திகதி புதன்கிழமை விபத்துக்குள்ளானதில்,
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து,
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலகுடாவ
பகுதியில் வீதியின்
குறுக்கே நின்ற
யானையுடன் மோதியதில்
இந்த விபத்து
இடம் பெற்றுள்ளது.
கயான்
பிரியதர்ஷன (44வயது) என்ற கான்ஸ்டபிளே காயமடைந்துள்ளார்
என, பொலிஸார்
தெரிவித்தனர். விபத்துக்குள்ளான வாகனம் சில்லுகள் உடைந்து
இரு பக்கங்களும்
திருப்ப முடியாத
நிலைக்கு சேதமடைந்துள்ளது.
வீதிக்குக்
குறுக்கே நின்ற
யானையுடன் மோதியதிலேயே
வாகனம் விபத்துக்குள்ளானதாகத்
தெரிவித்த பொலிஸார்,
விபத்து தொடர்பான
மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.