தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன்

பாடசாலையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்

தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பாடசாலையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம். அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் இடம்பெற்றுள்ளது.
14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது 47).

அதைத் தொடர்ந்து தந்தையின் வாகனத்தை அவன் 3 கி.மீ. தொலைவில் உள்ள தொடக்கப்பாடசாலைக்கு ஓட்டிச்சென்றுள்ளான். காரை அவன் அந்தப் பாடசாலை  விளையாட்டு மைதான வேலியின் மீது மோதினான். அதைத் தொடர்ந்து கைத்துப்பாக்கியால் பாடசாலைக்குள் சரமாரியாக சுட்டான். அதில் 2 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் பெரும் பதற்றம் அடைந்த பாடசாலை நிர்வாகம், உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தது. 7 நிமிடங்களில் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் சிறுவனை தன்னார்வ தீயணைப்பு வீரர் ஜாமி பிராக் என்பவர் மடக்கி பிடித்தார். அவன் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவன் தனது விபரீதத்தை தொடர்ந்து விடாதபடிக்கு அவனை சரியான நேரத்தில் மடக்கிப்பிடித்த தன்னார்வ தீயணைப்பு வீரர் ஜாமி பிராக்கிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன.


படுகாயம் அடைந்த குழந்தைகளும், ஆசிரியரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 வயது குழந்தை ஒன்றின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top