ஆசிரியர் குத்தி கொலை

மாணவர்கள் செய்த கொடூரம்


மாணவர்கள் வகுப்பறைக்குள் புகுந்து, சிரேஷ்டஆசிரியர் ஒருவரை, கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் எமது அண்டை நாடான இந்தியாவில் இடம்பெற்றுள்ளது
டில்லியில், உள்ள அரசு உயர்நிலைப் பாடசாலையில், இந்தி ஆசிரியராக பணியாற்றியவர் முகேஷ் குமார், இவர், பாடசாலையில் நடந்த பரீட்சையை கண்காணித்தார். அப்போது, வகுப்பறைக்குள் திடீரென புகுந்த, மாணவர்கள் இருவர், கத்தியால், முகேஷ் குமாரை சரமாரியாக குத்தினர்;
இதை பார்த்த மற்ற மாணவர்கள், அலறியடித்து ஓடினர்.தகவலறிந்து வந்த ஏனைய ஆசிரியர்கள், முகேஷ் குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர்; முகேஷ், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

 குறைவான வருகைப்பதிவு காரணமாக, பரீட்சை எழுத அனுமதிக்காததால், முகேஷ் குமாரை, மாணவர்கள் கொலை செய்ததாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த மாணவர்கள் இருவரையும், பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பாடசாலையில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 வகுப்பை சேர்ந்த ஒரு சில மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு வகுப்பை புறக்கணித்து வந்ததோடு மட்டும் இல்லாமல் ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் பல முறை பரீட்சைகளில் தேர்ச்சி பெறாமல் போயினர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தும் எந்த பயனும் இல்லாததால் மாணவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் தான் முகேஷ் குமார்.

அவ்வாறு நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பாடசாலைக்குள் நுழைந்து முகேஷ் குமாரை குத்திக் கொலை செய்து உள்ளார். அவருக்கு பாடசாலையில் இருந்த மற்றொரு மாணவர் துணையாக இருந்து உள்ளார்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள், ஆசிரியரை கொலை செய்த மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் உள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் பரீட்சைகளை நிறுத்தி வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதோடு முகேஷ் குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top