பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம்
கல்முனையில் மேலதிகமாக கல்முனை மத்தி கல்வி
வலயம்!
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி
வலயத்தையும் கல்முனைப் பிரதேசத்துக்கு கல்முனை மத்தி என மேலதிகமாக மற்றுமொரு கல்வி வலயத்தையும் நிறுவுவதற்கு
கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம், மகாண சபையில் 21
ஆம் திகதி புதன்கிழமை மாலை நடைபெற்றபோது, இது தொடர்பான பிரேரணையை கிழக்கு
மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி முன்வைத்தார்.
இதனை அடுத்து, மேற்படி கல்வி வலயங்களை அமைப்பதற்கு அமைச்சரவை
அங்கிகாரம் அளித்துள்ளதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.
குறித்த இரு பிரதேசங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள்
கல்வி கற்கின்றனர். அப்பிரதேசங்களில் கல்விச் செயற்பாட்டில் அதிக இடர்பாடுகள் காணப்படுவதால்,
அப்பிரதேசங்களில் அவசரமாக கல்வி வலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று
இக்கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் இல்லாமையால்,
மாணவர்களும் ஆசிரியர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், கல்முனைக்கும் மற்றுமொரு கல்வி வலயத்தை
அமைப்பது காலத்தின் தேவையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.