ஏறாவூர்
இரட்டைக்கொலை சந்தேக நபர்களுக்கு
ஜூன்
மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்
சந்தேக
நபர்கள் ஊடகவியலாளர்களை
அச்சுறுத்தியதாகவும்
தெரிவிப்பு
.
ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேகநபர்களை 31 ஆம் திகதி இன்றைய தினம்) ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை
ஜூன் மாதம் 9 ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான்
எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, குறித்த சந்தேகநபர்களை சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது
செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை திட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் குறித்த வழக்கு தொடர்பாக ஒவ்வொரு வழக்கு
தவணையின் போதும் அறிக்கையிட செல்லும் சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்கள்
இவ்வாறு நடத்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான
நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.