அம்பாறை மாவட்டத்தில்
நான்காயிரம் இந்து மக்கள் மதம் மாறியுள்ளனராம்
கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. தெரிவித்துள்ள புள்ளி விபரம்
அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக் கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழாகடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றபோது இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இப்புள்ளி விபரத்தை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.