ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபலசேனா அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.
மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை.
உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் இன்று ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இன்றும், ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையினால், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top