கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான

விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிப்பு




தற்பொழுது பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 2017 கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கால எல்லையை நீடிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைய இருந்தது.
இதனை ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நீடிப்பதற்காக கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு சகலவிதமான பரீட்சை சான்றிதழ்களையும் இலவசமாக மீள வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top