ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து!
உயிர் தப்பிய முதல்வர்!
இந்திய நாட்டிலுள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்
பயணம் செய்த
ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், முதல்வர் பட்நாவிஸ் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த
அனைவரும் காயங்கள்
ஏதுமின்றி உயிர்
தப்பித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள லத்தூர் நகரில் இன்று மதியம் அம்மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயணத்தில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உடன் இணைந்து மேலும் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயங்கள் இன்றி உயிர் பிழைத்துள்ளனர்.
இதுகுறித்தத் தகவல்களை உடனடியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்தார். தன் ட்விட்டர் பதிவில்,
‘நாங்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. நானும், என்னுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக உள்ளோம். வருந்தப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்த உடனேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.