வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சாய்ந்தமருதில் நிவாரணம்
சேகரிக்கும் பணி
(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவின்
வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம். நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் ஆகியோரின்
மேற்பார்வையில் நாட்டின் 12 மாவட்டத்தில்
வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி இன்று (30)
செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இப்பணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான எப்.எம்.தில்சாத்,
இஸட்.எம்.சாஜித் தலைமையிலான இளைஞர் கழக
உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.