சுயதொழில் முயற்சியாளர்களுக்கு
இன்று மன்னாரில் இடம்பெற்ற நடமாடும் சேவை
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கங்களில் நேற்று 28 ஆம் திகதி
இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கு உதவும் நடமாடும் சேவையைத் தொடர்ந்து இன்று 29 ஆம்
திகதி காலை (2017.05.29) மன்னாரிலும் நடமாடும் சேவை இடம்பெற்றது.
தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக
அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான
இந்த விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும்
தலைவர்களும் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும்
வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.