பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய
பல பொலிஸ் குழுக்கள் நியமனம்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஞானசார தேரரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொதுபல சேனா அமைப்பு ஈடுபட்டு வந்தது.
ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் தெருக்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், அம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.