ஐ.நா-வின்
தீவிர முயற்சியை அடுத்து
போர் நிறுத்தத்திற்கு
ஒப்புதல்
ஐ.நா-வின்
தீவிர முயற்சியை
அடுத்து காஸா
முனையில் 12 மணி போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும்,
ஹமாஸ் இயக்கமும்
ஒப்புக்கொண்டுள்ளனர். இஸ்ரேல் இளைஞர்கள்
சிலர் கொல்லப்பட்டதையடுத்து
அந்நாட்டு இராணுவம்
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸாவில் வான்வழி மற்றும்
தரைவழி தாக்குதல்
கடந்த 19 நாட்களாக
நடத்தி வந்தது.
இதில் பாலஸ்தீனர்கள்
900 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலியனர்கள்
மீது தொடர்ந்து
தாக்குதல் நடத்தி
வந்தனர். இதில்
இஸ்ரேல் தரப்பில்
35 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்
நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவும்
சில ஐரோப்பிய
நாடுகளும் அந்நாட்டுக்கு
விமானங்கள் இயக்குவதில் தற்காலிகமாக நிறுத்தினர். இந்த
நிலையில் ஐநா
பொதுச் செயலாளர்
பான்.கின்.மூன் கேட்டுக்கொண்டதையடுத்து
போர் நிறுத்தத்திற்கு
ஹமாஸ் இயக்கத்தினர்
ஒப்புக்கொண்டனர். அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் ஜான்
கேரி
கேட்டுக்கொண்டதையடுத்து இஸ்ரேலும் போர்
நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை
8 மணியில் இருந்து இரவு 8
மணி வரை
போர் நிறுத்தம்
அமுலில் இருக்கும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.