இஸ்ரேல் தாக்குதல்
தீவிரம்:
இதுவரை 870
பாலஸ்தீனர்கள் பலி
காஸா
மீதான தாக்குதலை
இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 115 பாலஸ்தீனர்கள்
உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு
இடையிலான போர்
18 நாள்களைக் கடந்து தொடர்கிறது. சர்வதேச நாடுகள்,
ஐ.நா.
ஆகியவற்றின் வலியுறுத்தலையும் மீறி இஸ்ரேல் தனது
தாக்குதலை தொடர்ந்து
மேற்கொள்கிறது.
ஐந்து
நாள் தற்காலிக
போர் நிறுத்தம்
மேற்கொள்ளப்பட வேண்டும் என வெஸ்ட் பேங்க்
பகுதியிலுள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த
மூத்த அதிகாரி
வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் காஸாவின் புதிய
எல்லைப் பகுதியை
நிர்மாணிக்கலாம் என அவர் தெரிவித்துள்லார்.
கடந்த
8ஆம் திகதி
முதல் நடத்தப்பட்ட
தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 870 ஆக
உயர்ந்துள்ளது. வியாழக் கிழமை ஒரே நாளில்
115 பாலஸ் தீனர்கள்
உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை
அதிகாலை காஸா
பகுதியில் இஸ்ரேல்
விமானங்கள் நடத்திய தாக்குதலில் 30 வீடுகள் இடிந்தன.
இத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்துக்கு அடுத்தநிலையில் பெரிய
அமைப்பான இஸ்லாமிய
கிளர்ச்சி அமைப்பின்
மூத்த தலைவர்
சலா ஹஸானெய்ன்,
அவரது இரு
மகன்களுடன் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகின்றது.
வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பாடசாலைமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ- மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு கூறும்போது, “உயிரிழந்த ஒவ்வொரு பாலஸ்தீனருக்காகவும் நான் வருந்துகிறேன். ஆனால், இதற்கு ஹமாஸ் தான் முழுப்பொறுப்பு. போர் முழுவீச்சில் நடைபெறும். தரை மற்றும் வான்வழித் தாக்குதல் தொடரும்” எனத் தெரிவித் துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.