கல்முனை சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா – 2014
முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார்
இளைஞர்
பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் கல்வி பிரதியமைச்சருமான,
தீனத் பவுண்டேசனின்
சிரேஷ்ட உறுப்பினருமான
சகோ. ஏ.எம். முஹம்மட்
முஜீபின் முயற்சியில்
தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சையில்
தெரிவு செய்யப்பட்ட
மாணவர்களையும், க.பொ.த. (சா.த) பரீட்சையில்
அதிகூடிய பெறுபேறுகளைப்
பெற்ற மாணவர்களையும்,
க.பொ.த (உ.த) பரீட்சையில்
சித்தியெய்தி பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும்
கௌரவிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்,கலந்து கொள்கின்றார் கௌரவ அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கல்முனை மாநகர முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரமுகர்கள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன்று 2014.08.02 சனிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு, கல்முனை அல் - பஹ்றியா மஹா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.