நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளை
மனதில்
கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம்
ஜெயலலிதா ரமழான் பெருநாள் வாழ்த்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று, தனது
ரமழான் பெருநாள் வாழ்த்து செய்தியில் தமிழக முதலமைமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமழான் பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது
அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய
ரமழான் பெருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரிடத்திலும் அன்பு
காட்டுங்கள், பிறருக்கு உதவி
புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று
கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரமழான் பெருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு
முறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.