காஸாவில் ஸஹிதானவர்களின்
எண்ணிக்கை
655 ஆக அதிகரிப்பு
பாலஸ்தீனத்தின்
காஸா மீது
இஸ்ரேல் நடத்தி
வரும் தாக்குதலில்
இதுவரை 655 பாலஸ்தீனர்கள் ஸஹிதாக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காஸாவை
கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ்
இயக்கத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 29 இஸ்ரேல்
இராணுவ வீரர்கள்
மற்றும் 2 பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.
அதேபோன்று
இஸ்ரேல் தரப்பில்
திங்கள்கிழமை மட்டும் 9 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து
உயிரிழந்த இஸ்ரேல்
ராணுவ வீரர்களின்
எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். ஒரு வீரரை
காணவில்லைபின்னர் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போரில்
பாதிக்கப்பட்ட காஸா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இதுவரை
ஒரு லட்சம்
பாலஸ்தீனர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண
அமைப்பிடம் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு
தேவையான அடிப்படை
வசதிகளை செய்து
கொடுப்பது மிகப்பெரிய
சவாலாக உருவெடுத்துள்ளதாக
ஐ.நா.
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.