இஸ்ரேல் விமான
நிலையம் பாதுகாப்பாக உள்ளதாம்
அந்நாட்டுஅமைச்சர்
தகவல்
இஸ்ரேல்
நாட்டின் விமான நிலையம் பாதுகாப்பாக
உள்ளது என
இஸ்ரேலின் போக்குவரத்து
அமைச்சர் காட்ஸ்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்க
விமானங்கள் தங்கள் இயல்பான நடவடிக்கைகளை தொடரலாம்
என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக பாலஸ்தீன நாட்டின்
காசா பகுதி
மீது இஸ்ரேல்
படையினர் நடத்தி
வரும் தாக்குதலால்
அங்கு பதற்றம்
நிலவியது. இதனால்
அமெரிக்க மத்திய
விமான போக்குவரத்து
நிர்வாகம் அனைத்து
விமான சேவைகளையும்
24 மணி நேரத்திற்கு
நிறுத்தி வைக்கும்
படி கேட்டுக்கொண்டது.
இந்த
விவகாரம் குறித்து
இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நேதன்யாகு,
அமெரிக்க வெளியுறவுத்
துறை செயலாளர்
ஜான் கெர்ரி
ஆகியோர் நேற்று
பேசினர். இதையடுத்து
நாட்டின் விமான
நிலையம் பாதுகாப்பாக
உள்ளது எனவும்
அமெரிக்க விமானங்கள்
தங்கள் இயல்பான
நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் இஸ்ரேலின் போக்குவரத்து
அமைச்சர் இஸ்ரேல்
காட்ஸ் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.